கோவை புலியகுளம் அரசு மகளிர் கல்லுாரியில் கலந்தாய்வு இன்று துவக்கம்

அரசு மகளிர் கல்லூரியில் பி.காம் பாடப்பிரிவுக்கு இன்றும் பி.எஸ்.சி., கணினி அறிவியல், கணிதம், பி.ஏ., ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு, வரும் 12ம் தேதியும், பி.ஏ., தமிழ் பாடப் பிரிவுக்கு 14ம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.


கோவை: கோவை அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு இன்று துவங்கியது.



அரசு மகளிர் கல்லூரியில் பி.காம் பாடப்பிரிவுக்கு இன்றும், பி.எஸ்.சி., கணினி அறிவியல், கணிதம், பி.ஏ., ஆங்கிலம் ஆகிய

பாடப்பிரிவுகளுக்கு, வரும் 12ம் தேதியும், பி.ஏ., தமிழ் பாடப் பிரிவுக்கு 14ம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.



கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், அசல் மாற்றுச் சான்றிதழ் மற்றும் இரண்டு நகல்கள், அசல் ஜாதிச் சான்றிதழ், இரண்டு நகல்கள், பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட்சைஸ் புகைப்படம் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை தவறாமல் கொண்டு செல்ல வேண்டும். சேர்க்கை கட்டணம் தொடர்பான விவரங்களை, www. gascwcbe.ac.in என்ற இணையதள முகவரி யில் தெரிந்து கொள்ளலாம்.



கலந்தாய்வு குறித்து கல்லூரி முதல்வர் வீரமணி கூறுகையில், காலை 9:30 மணிக்கு கலந்தாய்வு துவங்கும். மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள், கல்லூரிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். மாணவியருடன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவர், மட்டுமே வர வேண்டும். சேர்க்கை கிடைத்தவுடன், அன்றே கட்டணம் செலுத்தி, சேர்க்கையை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...