கோவையில் 18 மாத கைக்குழந்தையுடன் மருத்துவர் பட்டம் பெற்ற மாணவிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு

கோவையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 18 மாத கை குழந்தையுடன், கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ஷிபினா என்பவர் பட்டம் பெற்றார். அவருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்தார்.


கோவை: கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் ஷிபினா. இவருக்கு கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து, 2018-19 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்தார். கல்வி முடியும் முன்பே, 2021 ஆம் ஆண்டு மருத்துவரான அப்து ராஃப் என்பவருடன் திருமணம் இவருக்கு திருமணம் நடைபெற்றது.



திருமணத்திற்கு பிறகும் மருத்துவப் படிப்பை தொடர்ந்த ஷிபினாவுக்கு திருமணம் முடிந்த ஒருவருடத்திற்கு பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை கவனித்துக்கொண்டே, படிப்பை தொடர்ந்த ஷிபினா இன்று டாக்டர் ஷிபினா எம்.பி.பி.எஸ்ஸாக பட்டம் பெற்றார்.



கோவையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், தனது 18 மாத ஹலீமா என்ற பெண் கை குழந்தையுடன், வந்து பட்டம் பெற்றார். அவருக்கு தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்தார். பட்டம் பெற்ற ஷிபினாவுக்கு குடும்பத்தினர் மட்டுமின்றி அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...