ஆர்டிஇ மாணவர்களிடம் வலுக்கட்டாயமாக கட்டணம் வசூலிப்பு - கோவை ஆட்சியரிடம் பெற்றோர்கள் புகார்

கோட்டம்பட்டியில் உள்ள ஸ்ரீ லதாங்கி வித்யா மந்திர் பள்ளியில், ஆர்டிஇ மாணவர்களை ஒரு வகுப்பிலும், இதர மாணவர்களை ஒரு வகுப்பிலும் அமர வைத்து பாடம் நடத்துவதாக கோவை ஆட்சியரிடம் மாணவர்களின் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் RTE மாணவர்களிடமும் வலுக்கட்டாயமாக கட்டணம் வசூலிப்பதாகவும், RTE மாணவர்களை தனி வகுப்பறைகளில் வைத்து வகுப்புகளை எடுப்பதாகவும் அப்பள்ளியின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டம்பட்டியில் ஸ்ரீ லதாங்கி வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் (RTE) கீழ் மாணவர்கள் சிலர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அம்மாணவர்கள் ஆய்வக வகுப்புகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டுமென நிர்பந்திப்பதாகவும், கட்டணம் செலுத்தவில்லை என்றால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என குறுஞ்செய்தி அனுப்புவதாகவும் மாவட்ட நிர்வாகம் இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் மனு அளித்தனர்.

அவர்கள் அளித்துள்ள மனுவில் 2022-23 கல்வி ஆண்டில் புத்தக கட்டணம் இல்லாமல் கல்வி கட்டணமாக 11,000 வசூலிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர்கள், இந்த கல்வி ஆண்டில் கல்வி கட்டணம் புத்தக கட்டணமாக 26,000 ரூபாய் செலுத்த வேண்டுமென கட்டாயப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது RTE மாணவர்களை ஒரு வகுப்பிலும் இதர மாணவர்களை ஒரு வகுப்பிலும் அமர வைத்து பாடம் நடத்துவதாக கூறினர். இது போன்று மாணவர்களிடம் ஏற்றதாழ்வு பார்க்கும் அப்பள்ளியின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர். மேலும் DEO அலுவலகத்தை பொள்ளாச்சிக்கு மாற்ற வேண்டுமெனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...