கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குவிலென்ஸ் கண்ணாடி

கோவை மாநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உரிய பரிசோதனை செய்து அனுப்ப, நுழைவு வாயில் அருகே 2 இடங்களில் குவிலென்ஸ் கண்ணாடி அமைக்கப்பட்டு உள்ளது.


கோவை: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் புகார் மனு அளிக்க வருகின்றனர். இதுதவிர ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு புகார் மனுக்களை பெற்று வருகிறார்.

அவ்வாறு புகார் அளிக்க வரும் பொதுமக்களை சோதனை செய்து அனுப்பும் வகையில் போலீஸ் கமிஷனர் அலுவலக நுழைவுவாயில் அருகே வெடிகுண்டு கண்டறியும் தானியங்கி மெட்டல் டிடெக்டர் கருவி சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் தினமும் வருகின்றன. போலீஸ் உயர் அதிகாரிகள் வாகனங்கள் வெளியே வரும்போது அதே நேரத்தில் பொதுமக்களின் வாகனங்கள் வெளியே வரும்போது வாகனங்களை ஓட்டுபவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாகனம் வருவது தெரியவில்லை.



இதனால் அண்மையில் அங்கு விபத்தை தவிர்க்கவும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உரிய பரிசோதனை செய்து அனுப்பவும் நுழைவு வாயில் அருகே பட்டன் மூலம் இயக்கப்படும் 2 கேட், 2 இடங்களில் குவிலென்ஸ் கண்ணாடியும் அமைக்கப்பட்டு உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...