கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குவிலென்ஸ் கண்ணாடி

கோவை மாநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உரிய பரிசோதனை செய்து அனுப்ப, நுழைவு வாயில் அருகே 2 இடங்களில் குவிலென்ஸ் கண்ணாடி அமைக்கப்பட்டு உள்ளது.


கோவை: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் புகார் மனு அளிக்க வருகின்றனர். இதுதவிர ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு புகார் மனுக்களை பெற்று வருகிறார்.

அவ்வாறு புகார் அளிக்க வரும் பொதுமக்களை சோதனை செய்து அனுப்பும் வகையில் போலீஸ் கமிஷனர் அலுவலக நுழைவுவாயில் அருகே வெடிகுண்டு கண்டறியும் தானியங்கி மெட்டல் டிடெக்டர் கருவி சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் தினமும் வருகின்றன. போலீஸ் உயர் அதிகாரிகள் வாகனங்கள் வெளியே வரும்போது அதே நேரத்தில் பொதுமக்களின் வாகனங்கள் வெளியே வரும்போது வாகனங்களை ஓட்டுபவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாகனம் வருவது தெரியவில்லை.



இதனால் அண்மையில் அங்கு விபத்தை தவிர்க்கவும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உரிய பரிசோதனை செய்து அனுப்பவும் நுழைவு வாயில் அருகே பட்டன் மூலம் இயக்கப்படும் 2 கேட், 2 இடங்களில் குவிலென்ஸ் கண்ணாடியும் அமைக்கப்பட்டு உள்ளது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...