உடுமலை அருகே எரிசனம்பட்டியில் பிரதம மந்திரி கிசோன் யோஜனா திட்டம் குறித்து விழிப்புணர்வு

பிரதம மந்திரி கிசோன் யோஜனா திட்டம் குறித்து மெட்ராஸ் பெர்டிலைசிஸ் கம்பெனி சார்பில் எரிசனம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விவசாயிகள் பங்கேற்று சந்தேகங்ளை தெரிந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எரிசனம்பட்டி ஊராட்சியில் பாரதப் பிரதமரின் கிஷோர் யோஜனா திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இத்திட்டத்தில் 9 கோடியே 26 லட்சம் விவசாயிகளுக்கு 17வது தவணையாக வழங்க வேண்டிய ரூ.20000 கோடியை பாரத பிரதமர் சில தினங்களுக்கு முன் விடுவித்தார். மேலும் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 வீதம் ஆண்டுக்கு 6000 வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை கொண்டாடும் விதமாக மெட்ராஸ் பெர்டிலைசிஸ் கம்பெனி சார்பில் பயன் அடைந்த விவசாயிகளுக்கும் பயன்பட போகும் விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் கம்பெனியின் கோவை மண்டல கூடுதல் மேலாளர் அங்கையா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். புதிதாக இத்திட்டத்தில் சேர விரும்பும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...