உடுமலை அருகே எரிசனம்பட்டியில் பிரதம மந்திரி கிசோன் யோஜனா திட்டம் குறித்து விழிப்புணர்வு

பிரதம மந்திரி கிசோன் யோஜனா திட்டம் குறித்து மெட்ராஸ் பெர்டிலைசிஸ் கம்பெனி சார்பில் எரிசனம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விவசாயிகள் பங்கேற்று சந்தேகங்ளை தெரிந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எரிசனம்பட்டி ஊராட்சியில் பாரதப் பிரதமரின் கிஷோர் யோஜனா திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இத்திட்டத்தில் 9 கோடியே 26 லட்சம் விவசாயிகளுக்கு 17வது தவணையாக வழங்க வேண்டிய ரூ.20000 கோடியை பாரத பிரதமர் சில தினங்களுக்கு முன் விடுவித்தார். மேலும் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 வீதம் ஆண்டுக்கு 6000 வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை கொண்டாடும் விதமாக மெட்ராஸ் பெர்டிலைசிஸ் கம்பெனி சார்பில் பயன் அடைந்த விவசாயிகளுக்கும் பயன்பட போகும் விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் கம்பெனியின் கோவை மண்டல கூடுதல் மேலாளர் அங்கையா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். புதிதாக இத்திட்டத்தில் சேர விரும்பும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...