உடுமலை அருகே எரிசனம்பட்டியில் பிரதம மந்திரி கிசோன் யோஜனா திட்டம் குறித்து விழிப்புணர்வு

பிரதம மந்திரி கிசோன் யோஜனா திட்டம் குறித்து மெட்ராஸ் பெர்டிலைசிஸ் கம்பெனி சார்பில் எரிசனம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விவசாயிகள் பங்கேற்று சந்தேகங்ளை தெரிந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எரிசனம்பட்டி ஊராட்சியில் பாரதப் பிரதமரின் கிஷோர் யோஜனா திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இத்திட்டத்தில் 9 கோடியே 26 லட்சம் விவசாயிகளுக்கு 17வது தவணையாக வழங்க வேண்டிய ரூ.20000 கோடியை பாரத பிரதமர் சில தினங்களுக்கு முன் விடுவித்தார். மேலும் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 வீதம் ஆண்டுக்கு 6000 வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை கொண்டாடும் விதமாக மெட்ராஸ் பெர்டிலைசிஸ் கம்பெனி சார்பில் பயன் அடைந்த விவசாயிகளுக்கும் பயன்பட போகும் விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் கம்பெனியின் கோவை மண்டல கூடுதல் மேலாளர் அங்கையா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். புதிதாக இத்திட்டத்தில் சேர விரும்பும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...