தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று ஆளுநர் ஆா்.என்.ரவி கோவை வருகை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவுள்ள சா்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் இன்றிரவு 7 மணிக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கோவை வருகிறார்.


கோவை: சா்வதேச யோகா தினம் நாளை (ஜூன்.21) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள யோகா தின நிகழ்ச்சியில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்கிறார்.

இதற்காக சென்னையிலிருந்து இன்று ஜூன்.20 புறப்பட்டு விமானம் மூலம் இரவு 7 மணிக்கு கோவை சா்வதேச விமான நிலையம் வரும் ஆளுநா், அங்கிருந்து கார் மூலம் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விருந்தினா் மாளிகைக்கு சென்று தங்குகிறார்.

இதையடுத்து சா்வதேச யோகா தினத்தையொட்டி நாளை ஜூன்.21 காலை 5.55 மணி முதல் காலை 8 மணி வரை நடைபெறும் யோகாசன நிகழ்ச்சியில் அவா் பங்கேற்கிறார்.அதன் பின்னா் காலை 10.35 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு காலை 11.30 மணிக்கு விமானம் மூலம் கோவையிலிருந்து சென்னை திரும்புகிறார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...