தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று ஆளுநர் ஆா்.என்.ரவி கோவை வருகை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவுள்ள சா்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் இன்றிரவு 7 மணிக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கோவை வருகிறார்.


கோவை: சா்வதேச யோகா தினம் நாளை (ஜூன்.21) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள யோகா தின நிகழ்ச்சியில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்கிறார்.

இதற்காக சென்னையிலிருந்து இன்று ஜூன்.20 புறப்பட்டு விமானம் மூலம் இரவு 7 மணிக்கு கோவை சா்வதேச விமான நிலையம் வரும் ஆளுநா், அங்கிருந்து கார் மூலம் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விருந்தினா் மாளிகைக்கு சென்று தங்குகிறார்.

இதையடுத்து சா்வதேச யோகா தினத்தையொட்டி நாளை ஜூன்.21 காலை 5.55 மணி முதல் காலை 8 மணி வரை நடைபெறும் யோகாசன நிகழ்ச்சியில் அவா் பங்கேற்கிறார்.அதன் பின்னா் காலை 10.35 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு காலை 11.30 மணிக்கு விமானம் மூலம் கோவையிலிருந்து சென்னை திரும்புகிறார்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...