கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாமனார் வீட்டுக்கு தீ வைத்த மருமகன் கைது

கணவருடன் சோ்ந்து வாழ தனக்கு விருப்பமில்லை எனவும், நீதிமன்றம் மூலம் விவாகரத்து வழக்குத் தொடர உள்ளதாகவும் போலீசாரிடம் மனைவி கூறியதால், ஆத்திரமடைந்த கணவர், மாமனார் வீட்டுக்கு தீ வைத்துள்ளார். இதனையடுத்து மருமகனை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை ஆா்.எஸ்.புரம், மீனாட்சி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (60), ஆட்டோ ஓட்டுநா். இவரது மகளுக்கும், வேடப்பட்டி வி.டி.எஸ். நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மதன்ராஜ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

இந்நிலையில் மதன்ராஜூக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல, இருவருக்கும் இடையே திங்கள்கிழமை ஜூன்.17ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டதையடுத்து, மதன்ராஜ் மீது அவரது மனைவி தொண்டாமுத்தூா் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, மதன்ராஜூடன் சோ்ந்து வாழ தனக்கு விருப்பமில்லை எனவும், நீதிமன்றம் மூலம் விவாகரத்து வழக்குத் தொடர உள்ளதாகவும் மனைவி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதன்ராஜ், மீனாட்சி நகரில் உள்ள மனைவியின் தந்தை ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு சென்று வீட்டின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதைப் பார்த்த அருகிலிருந்தவா்கள் தீயை அணைத்தனா். அதற்குள் வீட்டின் முன்பகுதியில் இருந்த சில பொருள்கள் மற்றும் வீட்டின் முன்பக்க கதவு ஆகியவை தீயில் சேதமடைந்தன. பின்னர் இதுகுறித்து ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், ஆா்.எஸ்.புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநா் மதன்ராஜை நேற்று ஜூன்.19 கைது செய்தனா்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...