கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்தை தாராபுரம் நகராட்சியில் இணைக்க கூடாது என பொதுமக்கள் மனு

தாராபுரம் தாலுகாவில் ஜமாபந்தியில், கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்தை தாராபுரம் நகராட்சியில் இணைக்க வேண்டும் என்ற முடிவுக்கு எதிராக பொதுமக்கள் மனு அளித்தனர். ஆர்.டி.ஒ செந்தில் அரசன் பார்வைக்கு அனுப்பினார்.



திருப்பூர்: தாராபுரம் தாலுகாவில் ஜமாபந்தி ஆர்டிஓ செந்தில் அரசன் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. தாசில்தார் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். தாராபுரம் உள் வட்டத்தை சேர்ந்த 9 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பட்டாமாறுதல், ஓஏபி உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 220 மனுக்கள் அளிக்கப்பட்டது. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஒ கூறினார்.



தாராபுரம் கவுண்டச்சி புதூர் பஞ்சாயத்தைசேர்ந்த 9 வார்டுகளிலிருந்து பெண்கள் உள்பட சுமார் 200 பேர் தாராபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



பின்னர் ஆர்டிஓவிடம் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டதாவது, கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்தை தாராபுரம் நகராட்சியுடன் இணைப்பத என்ற முடிவு எடுக்க உள்ளதாக அறிந்தோம்.

100 நாள் வேலை திட்டத்தில் தற்போது 2 ஆயிரம் பேர் வேலை செய்து வருகிறோம். நகராட்சியுடன் இணைத்தால் வேலை வாய்ப்பை இழப்பதுடன் வாழ்வாதாரம் பாதிக்கும்.

மேலும வறுமை கோட்டிற்கு கீழ்வாழும் எங்களுக்கு நகராட்சியில் வசூலிக்கப்படும் சொத்துவரி, குடிநீர் கட்டணத்தை செலுத்த இயலாது. எனவே இவ்முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது மனுவை பெற்றுக்கொண்டார். ஆர்.டி.ஓ செந்தில் அரசன் தமிழக அரசின் பார்வைக்கு அனுப்பி வைப்பதாக கூறினார்.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...