கோவையில் தூய்மை பணியாளர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார் மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன்

கோவை மாநகராட்சி 63 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சி பணிகள் குழு தலைவருமான சாந்திமுருகன் தனது பிறந்த நாளை தூய்மை பணியாளர்களுடன் கேக் வெட்டி, காலை சிற்றுண்டி வழங்கி கொண்டாடினார்.


கோவை: கோவை மாநகராட்சி 63 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சி பணிகள் குழு தலைவருமான சாந்திமுருகன் தனது பிறந்த நாளை தூய்மை பணியாளர்களுடன் கேக் வெட்டி, காலை சிற்றுண்டி வழங்கி கொண்டாடி உள்ளார். பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன் தான் பதவியேற்ற நாள் முதல் தூய்மை பணியாளர்களின் மீது அன்பும் அக்கறையுடன் நடந்து கொள்ளும் இவர், அவர்களது இன்ப துன்பங்களில் பங்கேற்று வருவதாக அங்கு பணிபும் தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கேக் வெட்டிய நிகழ்வில் தூய்மை பணியாளர்கள் பணிகள் குழு தலைவருக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தனர். தூய்மை பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்தார்.

அப்போது கழக பொது குழு உறுப்பினர் மு.மா.ச.முருகன், சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன், மேற்பார்வையாளர் காளியப்பன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...