மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் கெமிக்கல் கலவையால் எழுந்த புகை - நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்

பிலிஷிங் பவுடர் மற்றுன் லைசால் மூலம் சுத்தம் செய்யப்பட்ட கழிவறையில் நோயாளி ஒருவர் தண்ணீர் ஊற்றியதன் விளைவாக கெமிக்கல் ரியாக்சன் ஏற்பட்டு அரசு மருத்துவமனை முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை 4 மணிக்கு திடீரென புகைமூட்டமாக காட்சி அளித்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் மற்றும் உறவினர்கள் உடனடியாக மருத்துவமனையை விட்டு அலறி அடித்துக் கொண்டு வெளியேறினார்.

தலைமை மருத்துவர் அருணா குமாரி விரைந்து செயல்பட்டு, தீயனைப்புத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உடனடியாக வரவழைத்தார். மேலும் சிகிச்சை பெற்று வந்த சில நோயாளிகளை உடனடியாக வெளியேற்றி, உடுமலை அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்.



இதனிடையே தீயணைப்புத் துறையினர் மருத்துவமனைக்குள் நுழைந்து சிலிண்டர்கள் இருக்கும் பகுதியில் ஆய்வு செய்தனர். அதன் பின் கழிவறை பகுதியில் பார்த்த போது பிலிசிங் பவுடர், லைசால் இரண்டும் இருந்துள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் வயிற்றுப் போக்கால் சில நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அடிக்கடி கழிவறைகளை தூய்மை பணியாளர் சுத்தம் செய்து வந்துள்ளார்.

இதை அறியாத நோயாளி ஒருவர் பிலிஷிங் பவுடர் மற்றுன் லைசால் மூலம் சுத்தம் செய்யப்பட்ட கழிவறையில் தண்ணீர் ஊற்றிய தன் விளைவாக கெமிக்கல் ரியாக்சன் ஏற்பட்டு புகை உருவாகி, மருத்துவமனை முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...