ஈஷா ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டுத் தரக் கோரி நிலத்தின் உரிமையாளர் கோவை ஆட்சியரிடம் மனு

பழங்குடியின மக்களுக்காக கொடுக்கப்பட்ட நிலத்தை ஈஷா நிர்வாகம் ஆக்கிரமிட்பு செய்துள்ளதாக நிலத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அந்த நிலத்தை மீட்டு மீண்டும் அவர்களுக்கே கொடுக்குமாறு அவர் கூறியுள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் செம்மேடு பகுதியை சேர்ந்தவர் அமெரிக்கா கவுண்டர்(எ) முத்துச்சாமி கவுண்டர். இவருக்கு சொந்தமான 44.3 ஏக்கர் நிலம் 1990களில் அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த நிலத்தை அங்கு வசிக்கும் பழங்குடியினர் மக்களுக்கு கொடுக்கும் படி முத்துச்சாமி கவுண்டர் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில் அந்த நிலத்தை ஈஷா நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதனை மீட்டு பழங்குடியின மக்களிடமே தரும்படியும் முத்துச்சாமி கவுண்டரின் மகள் விஜயகுமாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஜூன்.24 புகார் மனு அளித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், தங்கள் குடும்பத்தினர் அந்த இடத்தை அங்குள்ள ஆதிவாசி பழங்குடியின மக்களுக்கு கொடுப்பதற்காக அரசிடம் கொடுத்த நிலையில், தற்போது ஈஷா நிர்வாகம் அதனை ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்தார்.

அந்த நிலம் பழங்குடியின மக்களுக்கு சென்றடைய வேண்டிய நிலையில் அங்கு ஈஷாவினர் அவர்களது தேவைக்கு பயன்படுத்தி வருவதாக கூறினார். அந்த நிலத்திற்காக அனைத்து மூல பத்திர ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாக கூறினார். மேலும் அங்கு கட்டப்படும் மின் மயானம் அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு தேவையே இல்லை எனவும், இவர்கள் புதைக்கும் வழக்கத்தை கொண்டவர்கள் எனக் கூறினார்.

அதே போல் செம்மேடு பகுதியை சேர்ந்த குளத்தேரி பழங்குடி மக்கள் தங்கள் கிராமத்தை ஒட்டியுள்ள இடத்தில் ஈஷா நிர்வாகம் மின் வேலி அமைத்துள்ளதாகவும், அதனை அகற்ற வேண்டுமென மனு அளித்தனர். அதே சமயம் தங்களுக்கு மின் தகன மேடையும் தேவையில்லை எனவும், தாங்கள் புதைக்கும் வழக்கத்தை கொண்டவர்கள் என தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...