கோவை மத்திப்பாளையத்தில் திமுக சார்பில் ஶ்ரீ ஸ்வர்ண வாராஹி அம்மன் திருக்கோவிலில் அன்னதானம்

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இந்திய கூட்டணி வேட்பாளர்கள் 40க்கு 40 தொகுதியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக, கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் தலைமையில் ஶ்ரீ ஸ்வர்ண வாராஹி அம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.


கோவை: டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தமிழ்நாடு முதல்வர் தலைமையிலான இந்திய கூட்டணி வேட்பாளர்கள் 40க்கு 40 தொகுதியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக, கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் தலைமையில் 40 கோவில்களில் அன்னதானம் வழங்க திட்டமிட்டப்பட்டது.

இதன் துவக்கமாக பஞ்சமி நாளை முன்னிட்டு கோவை தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட மத்திப்பாளையத்தில் ஶ்ரீ ஸ்வர்ண வாராஹி அம்மன் திருக்கோவில் சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்த அன்னதான நிகழ்வை தென்கரை பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.



இதுகுறித்து கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் கூறியதாவது, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி வழிகாட்டுதல்படி முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா நிறைவு விழா மற்றும் தமிழக முதல்வர் தலைமையிலான இந்திய கூட்டணி வேட்பாளர்கள் 40க்கு 40 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றதையும், மேலும் நூறு ஆண்டுகளுக்கு மேலாக கழத்தையும் வழி நடத்திடவும், தமிழக மக்களின் நிரந்திர முதல்வராக பணியாற்றிட வேண்டியும்,அமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்சிறந்த முறையில் மக்கள் பணியாற்றி வேண்டி 40 திருக்கோவில்களில் அன்னதானம் வழங்க திட்டமிட்டு இருந்தோம்.

இதன் தொடக்க விழாவாக கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட மத்திப்பாளையத்தில் அமைந்துள்ள ஶ்ரீ ஸ்வர்ண வாராஹி அம்மன் திருக்கோவிலில் சிறுபான்மை நல பிரிவு சார்பில் நடைபெற்ற அன்னதானம் வழங்கும் விழாவை தென்கரை பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி துவக்கி வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இன்று மாலை சார்கார்சாமகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டத்தரசி அம்மன் கோவிலில் தொடர்ந்து 7 நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து 40 கோவில்களில் அன்னதானம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் தெரிவித்தார்.

இந்த அன்னதான விழா தொடங்குவதற்கு முன் ஶ்ரீ விஸ்ணு மாய திருக்கோவில் சுவாமிகள் அஸ்வின் யாக பூஜை நடத்திட, அம்மனுக்கு சிறப்பு அலங்கார, ஆராதனையை இக்கோவில் சுவாமிகள் இராஜேந்திரன் செய்தார். இந்த விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் ஜோதிடர், சிவபக்தர், காளி உபாசகர் சிவகுருநாதன் செய்தார். இந்த விழாவில் பக்தர்கள், பொதுமக்கள், கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...