கனமழை காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மறுஅறிவிப்பு வரும் வரை கோவை குற்றால அருவிக்கு சுற்றுலாப்பயணிகள் வர வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை குற்றால அருவியில் குளிக்க வனத்துறையினர் நேற்று தடை விதித்திருந்த நிலையில், அந்தத் தடை இன்றும் தொடர்கிறது. கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் ஜூலை மாதம் நான்காம் தேதி வெள்ளப்பெருக்கால் கோவை குற்றாலத்தில் தடை போடப்பட்ட நிலையில், தற்பொழுது முன்னதாகவே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கோவை குற்றாலம் அருவி மூடப்பட்டுள்ளது.

கோவை குற்றாலம் அருவி இன்னும் சில நாட்களுக்கு திறப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும், பொதுமக்கள் யாரும் கோவை குற்றாலத்திற்கு வர வேண்டாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை குற்றாலம் அருவி இன்னும் சில நாட்களுக்கு திறப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும், பொதுமக்கள் யாரும் கோவை குற்றாலத்திற்கு வர வேண்டாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.