கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் மற்றும் தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மதுக்கரை, தொண்டாமுத்தூர் ஆகிய வட்டாரங்களில் நிலுவையாக உள்ள பணிகளை பதினைந்து நாட்களுக்குள் முடிக்குமாறும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம், ஆனைமலை வட்டாரத்திற்கான வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டம் மற்றும் தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் இன்று ஜூன்.27 நடைபெற்றது.



இக்கூட்டத்தில் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 2023-2024 ல் நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட 35 பணிகளில் 15 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. நிலுவையாக உள்ள 20 பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அவற்றினை விரைந்து முடிக்கவும் பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மதுக்கரை, தொண்டாமுத்தூர் ஆகிய வட்டாரங்களில் நிலுவையாக உள்ள பணிகளை இன்னும் பதினைந்து நாட்களுக்குள் முடிக்குமாறும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.



15 முன்மொழிவுகள் பரிசீலனைக்கு ஆனைமலை வட்டாரம், கோட்டூர் மற்றும் வேட்டைக்காரன்புதூர் பகுதியில் மலைவாழ் மக்களுக்கு வீடுகள் கட்ட பெறப்பட்ட முன்மொழிவுகளும், வனத்துறையிடமிருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளும் மாவட்ட நிர்வாகத்தால் பரிந்துரைக்க ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மேலும் மகளிர் குழுவிற்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் புளி பதப்படுத்தி மதிப்புக்கூட்டுதல் செய்யும் பணிக்கான முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டு பரிந்துரைக்க ஏற்றுக் கொள்ளப்பட்டது. வளமிகு வட்டாரமாக கோயம்புத்தார் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆனைமலை வட்டாரம் முக்கிய வளர்ச்சிக் குறியீடுகளில் எந்தெந்த குறியீடுகளில் பின்தங்கி உள்ளது என கள ஆய்வு மற்றும் துறை வாரியான அறிக்கைகள் மூலம் கண்டறியப்பட்டு, அதனை நிவர்த்தி செய்யும் விதமாக திட்டங்கள் மூலம் பணிகளை தேர்வு செய்திட மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரை வழங்கினார்.

மேலும் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் மாநில திட்டக்குழுவினால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன் பேராசிரியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள். மேலும் தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டத்தின்கீழ் அரசுத் திட்டங்களை எளிமையாகவும் விரைவாகவும் மக்களிடம் சேர்க்கும் விதமாக முன்மொழிவுகள் தயார் செய்து வழங்கவும் அதனை மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு பரிந்துரை செய்து அனுமதி பெற்று செயல்படுத்தலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

Newsletter

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...