'அடித்தட்டு மக்களுக்கு கல்வி அவசியம்' - கோவை மறை மாவட்ட ஆயர் டாக்டர் தாமஸ் அக்குவினாஸ்

கோவை மறை மாவட்ட ஆயர் டாக்டர் தாமஸ் அக்குவினாஸ் பிஷப் அம்புரோஸ் கல்லூரி மற்றும் கார்மல் கார்டன் பப்ளிக் பள்ளியின் புதிய அங்கீகாரங்களை கொண்டாடும் விழாவில் பேசினார். அடித்தட்டு மக்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.



கோவை: கோவை சுங்கம் பைபாஸ் அருகே உள்ள பிஷப் அம்புரோஸ் கல்லூரி வளாகத்தில் இன்று மாலை சிறப்பு விழா நடைபெற்றது. இந்த விழா, பிஷப் அம்புரோஸ் கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்து கிடைத்ததையும், கார்மல் கார்டன் பப்ளிக் பள்ளி சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்றதையும் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.



விழாவின் சிறப்பு விருந்தினராக கோவை மறை மாவட்ட ஆயரும், கல்லூரியின் தலைவருமான டாக்டர் தாமஸ் அக்குவினாஸ் கலந்து கொண்டார். அவர் பள்ளி மற்றும் கல்லூரியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

விழாவிற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் தாமஸ் அக்குவினாஸ், "பிஷப் அம்புரோஸ் கல்லூரி 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது தரம் உயர்த்தப்பட்டு 2024ம் ஆண்டு முதல் தன்னாட்சிக் கல்லூரிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது மாணவர்களின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவாகும்," என்றார்.

கார்மல் கார்டன் பப்ளிக் பள்ளி பற்றி பேசுகையில், "பெற்றோர்களின் விருப்பத்திற்கேற்ப சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டு வரும் முயற்சியில் தற்போது சிபிஎஸ்இ அங்கீகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது," என்று கூறினார்.

கத்தோலிக்க மறை மாவட்டத்தின் நோக்கம் குறித்து பேசுகையில், "எங்களது முக்கிய லட்சியம் தொண்டு செய்வது ஆகும். அதில் கல்வித் தொண்டு முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளோம். குறிப்பாக, கல்வியை வியாபாரமாக இல்லாமல், அடித்தட்டு மக்கள் அனைவருக்கும் கல்வியை கொண்டு சேர்க்கும் வகையில் மாணவர் சேர்க்கைக்கு குறைந்த கட்டணத்தை வழங்கி வருகின்றோம்," என்று விளக்கினார்.

இந்த விழாவில் கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்டேனீஸ் சிறப்புரை வழங்கினார். கல்லூரியின் செயலர் அருட்தந்தை டாக்டர் ஆர்.டி.இ ஜெரோம் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் அ. பீட்டர் ராஜ், பள்ளி முதல்வர் உஷா ராணி, ரோமன் கத்தோலிக்க பள்ளியின் பொறுப்பாளர் ஆரோக்கிய ததேசு மற்றும் கோவை மறை மாவட்ட பொருளாளர் ஆன்டனி செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மேலும், இந்த விழாவில் ஆர் சி குழு உறுப்பினர்கள், பாதிரியார்கள், கன்னியஸ்திரிகள், பள்ளி, கல்லூரி துணை முதல்வர், டீன் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த விழா, கோவையின் கல்வித்துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அடித்தட்டு மக்களுக்கு தரமான கல்வியை குறைந்த செலவில் வழங்கும் முயற்சி பெரிதும் பாராட்டப்படுகிறது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...