கோவை கணபதி-சங்கனூர் சாலையில் 20 ஆண்டுகளாக இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பின் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முடிவெடுத்தனர்.
Coimbatore: கோவை கணபதி பகுதியில் இருந்து சங்கனூர் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலையில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமாருக்கு சொந்தமான கட்டிடத்தில் கடந்த 20 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை (எண் 1638) இயங்கி வருகிறது.
இந்த டாஸ்மாக் கடைக்கு அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு கட்டங்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எந்தவித தீர்வும் கிடைக்காத காரணத்தால், ஜூலை 4 அன்று திடீரென அந்த கடை முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய அதிகாரிகளிடம் மனு அளித்து இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும், சாலை மறியலில் ஈடுபடக்கூடாது என்றும் எடுத்துக் கூறினர்.
இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இந்த டாஸ்மாக் கடைக்கு அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு கட்டங்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எந்தவித தீர்வும் கிடைக்காத காரணத்தால், ஜூலை 4 அன்று திடீரென அந்த கடை முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய அதிகாரிகளிடம் மனு அளித்து இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும், சாலை மறியலில் ஈடுபடக்கூடாது என்றும் எடுத்துக் கூறினர்.
இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.