கோவையில் மருத்துவ அலட்சியத்தால் உயிரிழந்த மனைவி: கணவருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

கோவையில் மருத்துவ அலட்சியத்தால் மனைவி உயிரிழந்த வழக்கில், கணவருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Coimbatore: கோவை மாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த தமிழக மின் வாரிய உதவிப் பொறியாளர் சாய் பிரேமனின் (45) மனைவி ராஜலட்சுமி (43), 2018 ஜனவரி 8-ஆம் தேதி இருசக்கர வாகன விபத்தில் சிக்கி தாடை எலும்பில் சிறு விரிசல் ஏற்பட்டது. அறுவை சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ரத்தம் செலுத்தப்பட்ட பின் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார்.

உடற்கூராய்வின் போது, ராஜலட்சுமிக்கு செலுத்தப்பட்ட ரத்தம் அவரின் உடலுக்கு பொருந்தாமல் இருந்ததும், நுரையீரல் காயமடைந்து அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. மருத்துவ அலட்சியம் காரணமாக மனைவி உயிரிழந்ததாக கூறி, சாய் பிரேமன் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

மாவட்ட குறைதீர் ஆணையத் தலைவர் தங்கவேல், உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. விசாரணையின் முடிவில், மருத்துவமனை நிர்வாகமும் மருத்துவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச பணிகளைச் செய்யாமல் அலட்சியமாக நடந்து கொண்டதாக கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ராஜலட்சுமியின் கணவருக்கு மருத்துவர்கள் அருண்குமார், தமிழ்செல்வன், ஆண்டனி, பாலசந்தர் ஆகியோர் சேர்ந்து ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஜூலை 5-ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. இந்த தீர்ப்பு மருத்துவ அலட்சியத்திற்கு எதிரான முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...