கோவை அரசு பொருட்காட்சியை நீட்டிக்க வியாபாரிகள் கோரிக்கை

கோவை வஉசி மைதானத்தில் நடைபெறும் அரசு பொருட்காட்சியை ஜூலை 14 வரை நீட்டிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் காரணமாக தாமதமாக தொடங்கிய காட்சியில் மக்கள் வருகை குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Coimbatore: கோவையில் தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்பு துறை சார்பில் வஉசி மைதானத்தில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியை நீட்டிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கு அரங்கம் அமைத்துள்ள வியாபாரிகள் சார்பில், தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்பு துறை இயக்குனருக்கு அண்மையில் மனு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த மனுவில், கடந்த மே 29 அன்று தொடங்கிய இப்பொருட்காட்சி ஜூலை 12 அன்று நிறைவடைய உள்ளதாகவும், இதனை ஜூலை 14 வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வழக்கமாக கோடை விடுமுறை காலத்தில் நடைபெறும் இந்த பொருட்காட்சி, இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தாமதமாக தொடங்கியது. தற்போது கோடை விடுமுறை முடிந்து, பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், மக்களின் வருகை குறைவாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை சுமார் 1.50 லட்சம் பேர் மட்டுமே பொருட்காட்சிக்கு வருகை புரிந்துள்ளனர். கடந்த ஆண்டு 2.50 லட்சம் பேர் வருகை புரிந்ததாகவும், அதற்கேற்ப வருவாய் இருந்ததாகவும், ஆனால் தற்போது வருவாய் அளவும் குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பொருட்காட்சியில் அரசின் நலத்திட்டங்களை மக்கள் கண்டுகளித்து வருவதோடு, பொழுதுபோக்கு அம்சங்களையும் பயன்படுத்தி வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சியை நீட்டிப்பதன் மூலம் மேலும் அதிக மக்கள் பயனடைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...