கோவை மருதமலை கோயில் பாதையில் குட்டிகளுடன் கடந்து செல்லும் யானைக் கூட்டம்: வைரலாகும் வீடியோ

கோவை மருதமலை கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் குட்டிகளுடன் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையைக் கடந்து சென்றன. இந்த காட்சியை பக்தர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.


கோவை: கோவை மருதமலை கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் குட்டிகளுடன் காட்டு யானைக் கூட்டம் சாலையைக் கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மருதமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வடவள்ளி, ஐ.ஓ.பி காலனி, தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அவ்வப்போது ஊர்களுக்குள் வந்து செல்வது வழக்கமாகிவிட்டது.

கடந்த சில நாட்களாக ஒற்றை யானை மற்றும் இரண்டு காட்டு யானைகள் மருதமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டு பாதை மற்றும் மலைச் சாலையில் கடந்து சென்று வந்தன. இந்நிலையில், ஜூலை 11 அதிகாலை பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் மருதமலை மலைச் சாலையைக் கடந்து சென்றுள்ளன.

இந்தக் காட்சியை கோயிலுக்கு சென்ற பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால், வனத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் வலியுறுத்துகிறது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...