பொள்ளாச்சி அருகே விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்

பொள்ளாச்சி அருகே கோவில்பாளையம் பகுதியில் இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த தந்தை மற்றும் இரு மகன்களை பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் காப்பாற்றினார். அவரது மனிதநேய செயல் பாராட்டப்பட்டுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சி அருகே கோவில்பாளையம் பகுதியில் நடந்த ஒரு சாலை விபத்தில் காயமடைந்த தந்தை மற்றும் அவரது இரு மகன்களை பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் காப்பாற்றிய சம்பவம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

பொள்ளாச்சி தாமரைகுளத்தைச் சேர்ந்த கனகவேல் என்பவர் தனது இரு மகன்களான தரணீஸ் மற்றும் தரணீந்திரனுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். கோவில்பாளையம் அருகே அவர்களது வாகனம் எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் மோதியதில் மூவரும் காயமடைந்தனர்.



சம்பவ இடத்தின் வழியாக கோவையிலிருந்து திரும்பி வந்த பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், விபத்தை கண்டதும் உடனடியாக தனது அரசு வாகனத்தில் காயமடைந்தவர்களை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்களிடம் சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் சிகிச்சை தேவைப்பட்டதால், காயமடைந்தவர்களை கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பி வைத்தார்.

நகராட்சி தலைவரின் இந்த மனிதநேய செயல் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. அவசர காலங்களில் அதிகாரிகள் இது போன்ற மனிதநேய அணுகுமுறையை கடைப்பிடிப்பது அவசியம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...