தீத்திப்பாளையம் அருகே நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்காமல் திரும்பிச் சென்ற அதிகாரிகள்..!

தீத்திப்பாளையம் அருகே பீட்டுபள்ளம் பகுதியில் 2.5 ஏக்கர் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற பேரூர் வருவாய்த்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் நடவடிக்கை எடுக்காமல் திரும்பிச் சென்றனர்.


Coimbatore: கோவை மாவட்டம் தீத்திப்பாளையம் அருகே உள்ள பீட்டுபள்ளம் பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நீர்வழிப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இப்பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள் வண்டி பாதையை ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 200 ஆண்டுகள் பழமையான சங்கிலி கருப்பராயன் கோயிலுக்கு செல்லும் நீர்வழிப்பாதையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் முன்னதாக மனு அளித்திருந்தது. இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் சமீபத்தில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.



இந்நிலையில், ஜூலை 12 ஆம் தேதி பேரூர் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற பீட்டுபள்ளம் பகுதிக்கு சென்றனர். ஆனால், அங்கு ஆக்கிரமிப்பாளர்கள் தாங்கள் முன்னதாகவே நிலத்தை அளந்ததாக கூறி, மீண்டும் நிலத்தை அளக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அதிகாரிகளுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில், பேரூர் வருவாய்த்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திரும்பிச் சென்றுவிட்டனர். இச்சம்பவம் உள்ளூர் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...