கோவையின் புதிய மாஸ்டர் பிளான் 2025 ஜனவரியில் தயாராகும்

கோவையின் புதிய மாஸ்டர் பிளான் 2025 ஜனவரியில் தயாராகும். 3000 பொது கருத்துக்களை ஆராய்ந்து, திருத்தப்பட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் ஒப்புதலுக்குப் பிறகு இறுதி செய்யப்படும்.


Coimbatore: கோவை மாநகரின் புதிய மாஸ்டர் பிளான் 2025 ஜனவரியில் தயாராகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவை மாநகரின் கடைசி மாஸ்டர் பிளான் 1994ல் புதுப்பிக்கப்பட்டது. 2041 ஆம் ஆண்டில் கோவை மாநகரின் மக்கள் தொகை 45 லட்சமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு புதிய மாஸ்டர் பிளான் தேவை என்ற கோரிக்கை தொழில்துறை, சமூக மற்றும் இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, பல்வேறு அரசுத் துறைகள் கோவை மாநகராட்சியுடன் இணைந்து வரைவு மாஸ்டர் பிளானை உருவாக்கின.

இந்த வரைவு 2023 அக்டோபரில் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது. அரசின் ஒப்புதலுக்குப் பிறகு, 2024 பிப்ரவரி 11 அன்று இந்த வரைவு அறிக்கை https://coimbatorelapa.com/ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பொதுமக்களின் கருத்துக்களை பெற மே 15, 2024 வரை அவகாசம் வழங்கப்பட்டது.

தற்போது இந்த வரைவு மாஸ்டர் பிளான் மீது 3000 பொது கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகள் வந்துள்ளன. இவற்றை ஆராய்ந்து முடிக்க இரண்டு மாதங்கள் ஆகும். பின்னர், திருத்தப்பட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, தமிழக அரசின் நகர் ஊரமைப்பு இயக்ககத்திற்கு அனுப்பப்படும்.

அதிகாரிகள் இந்த அறிக்கையை ஆய்வு செய்து உறுதி செய்த பிறகு இறுதி வடிவம் பெறும். இந்த அனைத்து பணிகளும் முடிவடைய 2025 ஜனவரி வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...