பொள்ளாச்சியில் மாநில அளவிலான கராத்தே போட்டி: 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பர். 2025ல் உலக கராத்தே போட்டி பொள்ளாச்சியில் நடைபெறவுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சியில் இன்டர்நேஷனல் சிண்டோ கான் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இப்போட்டி பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடத்தப்பட்டது.

இப்போட்டியில் திண்டுக்கல், திருச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.



ஜூனியர், சப் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என்ற வயது மற்றும் எடை பிரிவுகளின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

கட்டா, குமிட்டே, டீம் கட்டா ஆகிய மூன்று செயல்முறைகளில் மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியின் முடிவில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இப்போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்ற மாணவ, மாணவிகள் தேசிய அளவில் நடைபெறும் கராத்தே போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். மேலும், 2025 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி பொள்ளாச்சியில் உலக கராத்தே போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த உலகப் போட்டியில் 2000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பொள்ளாச்சி பகுதிக்கு பெருமை சேர்க்கும் என இந்திய கராத்தே தலைமை பயிற்சியாளர் பஞ்சலிங்கம் தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...