கோவை அடுக்குமாடி குடியிருப்பில் வாலிபர் தாக்குதல்: போலீஸ் நடவடிக்கை எடுக்க மறுப்பு

கோவை பூச்சியூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வாலிபர் ஒருவர் குடியிருப்பாளர்களையும் பணியாளர்களையும் தாக்குவதாக புகார். போலீஸார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குடியிருப்பாளர்கள் குற்றச்சாட்டு.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள பூச்சியூரில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வாலிபர் ஒருவர் குடியிருப்பாளர்களையும் பணியாளர்களையும் தாக்குவதாக புகார் எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குடியிருப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த குடியிருப்பில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் சங்கர் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக சங்கர் குடியிருப்பாளர்களை அச்சுறுத்துவதோடு, தாக்குவதாகவும் புகார் எழுந்துள்ளது.



சமீபத்தில் வெளியான சிசிடிவி காட்சிகளில், சங்கர் அங்கு பணிபுரியும் வேலைக்காரப் பெண் மற்றும் பாதுகாவலரை தாக்குவது பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளின் அடிப்படையில் குடியிருப்பாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படும் சங்கர், கண்ணாடிகளை உடைத்து ஊசி எறிவதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், வீட்டின் கதவுகளை அடிக்கடி தட்டுவதால் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...