கோவை அடுக்குமாடி குடியிருப்பில் வாலிபர் தாக்குதல்: போலீஸ் நடவடிக்கை எடுக்க மறுப்பு

கோவை பூச்சியூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வாலிபர் ஒருவர் குடியிருப்பாளர்களையும் பணியாளர்களையும் தாக்குவதாக புகார். போலீஸார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குடியிருப்பாளர்கள் குற்றச்சாட்டு.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள பூச்சியூரில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வாலிபர் ஒருவர் குடியிருப்பாளர்களையும் பணியாளர்களையும் தாக்குவதாக புகார் எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குடியிருப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த குடியிருப்பில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் சங்கர் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக சங்கர் குடியிருப்பாளர்களை அச்சுறுத்துவதோடு, தாக்குவதாகவும் புகார் எழுந்துள்ளது.



சமீபத்தில் வெளியான சிசிடிவி காட்சிகளில், சங்கர் அங்கு பணிபுரியும் வேலைக்காரப் பெண் மற்றும் பாதுகாவலரை தாக்குவது பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளின் அடிப்படையில் குடியிருப்பாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படும் சங்கர், கண்ணாடிகளை உடைத்து ஊசி எறிவதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், வீட்டின் கதவுகளை அடிக்கடி தட்டுவதால் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Newsletter

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...