தாராபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தளவாய்பட்டினம் சிஎஸ்ஐ அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். அமைச்சர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார்.


திருப்பூர்: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தளவாய்பட்டினம் சிஎஸ்ஐ அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.



திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு முன், கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியில் வைக்கப்பட்டுள்ள அவரது திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மரியாதை செலுத்தினார்.



பின்னர், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை வழங்கினார்.



அவர் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை அருந்தினார்.



மேலும், தனக்கு அருகில் இருந்த மாணவ மாணவிகளுக்கு காலை உணவை ஊட்டிவிட்டு, அவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...