கோவை மதுக்கரையில் கஞ்சா விற்பனை: 25 வயது இளைஞர் கைது

கோவை மதுக்கரையில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். தனிப்படை காவல்துறையினர் நடத்திய சோதனையில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், மதுக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, ஜூலை 5 ஆம் தேதி தனிப்படை காவல்துறையினர் மதுக்கரை பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த மதுக்கரை பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (25) என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஈஸ்வரனிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல, கோவை போத்தனூர் போலீசார் நேற்று ஜூலை.14 ரோந்து பணி சென்றனர். அப்போது போத்தனூர்-பேருந்து நிலையம் வழியில் உள்ள காலி இடத்தில் சந்தேகம் படும்படி நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சோதனை செய்ததில், அவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. 

பின்னர் போலீசார் கஞ்சா விற்ற வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த முகமத் தஸ்தாகீர்(26) என்பவரை கைது செய்தனர். பின் அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க காவல்துறை தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...