வால்பாறையில் கனமழை காரணமாக 23வது மற்றும் 24வது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையில் மண் சரிந்து மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கித் தவித்தன.
Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிக மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்து காணப்படுகின்றன.
இந்நிலையில், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 23வது மற்றும் 24வது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையில் சாலையின் மேற்பகுதியில் இருந்து மண் சரிந்து மரம் விழுந்தது. இதனால் சாலையில் மண் குவியல்களாக விழுந்து இருந்தது. காலை 4:30 மணி அளவில் வால்பாறைக்கு வந்த பேருந்து ஓட்டுநர் இதனைப் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இதனால் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு வரும் வாகனங்களும், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு செல்லும் வாகனங்களும் சாலையில் நீண்ட தூரம் நின்றன. சுமார் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் இவ்வாறு சிக்கித் தவித்தன. காலை 7 மணி அளவில் தீயணைப்பு துறையினரும், நெடுஞ்சாலை துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மரங்களை வெட்டி அகற்றினர். மேலும், ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் கிடந்த கற்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சாலை சீரமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து வழக்கம் போல் தொடங்கியது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேலும் இது போன்ற சம்பவங்கள் நிகழக்கூடும் என்பதால், வால்பாறை பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 23வது மற்றும் 24வது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையில் சாலையின் மேற்பகுதியில் இருந்து மண் சரிந்து மரம் விழுந்தது. இதனால் சாலையில் மண் குவியல்களாக விழுந்து இருந்தது. காலை 4:30 மணி அளவில் வால்பாறைக்கு வந்த பேருந்து ஓட்டுநர் இதனைப் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதனால் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு வரும் வாகனங்களும், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு செல்லும் வாகனங்களும் சாலையில் நீண்ட தூரம் நின்றன. சுமார் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் இவ்வாறு சிக்கித் தவித்தன. காலை 7 மணி அளவில் தீயணைப்பு துறையினரும், நெடுஞ்சாலை துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மரங்களை வெட்டி அகற்றினர். மேலும், ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் கிடந்த கற்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சாலை சீரமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து வழக்கம் போல் தொடங்கியது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேலும் இது போன்ற சம்பவங்கள் நிகழக்கூடும் என்பதால், வால்பாறை பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.