கோவை மாநகராட்சி ஆணையர் மழைக்கால டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் IAS, மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். கொசு உற்பத்தியை தடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.


கோவை: கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள், மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கோயமுத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும் வசிக்கும் பொதுமக்களுக்கு ஆணையர் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது கோயமுத்தூர் மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழைக்காலம் தீவிரமடைந்துள்ளதால், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

பொதுமக்கள் தங்கள் வீடுகள், கட்டுமான இடங்கள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள் மற்றும் அங்காடிப் பகுதிகளில் உள்ள நீர் சேகரிப்பு கொள்கலன்களை கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும். வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் தேவையற்ற உடைந்த பொருட்கள் இருப்பின் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுப்பது குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால், அது குறித்து சம்பந்தப்பட்ட வார்டு சுகாதார அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் வீட்டுக் கூரைகளில் டயர் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணியில் ஈடுபடும் மாநகராட்சி ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

காய்ச்சல் ஏற்பட்டால், மருந்தகங்களில் மருந்துகள் வாங்கி பயன்படுத்துவதை தவிர்த்து, உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினசரி குடிநீரை காய்ச்சி ஆற வைத்து பருகுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் கொசுக்கள் உற்பத்தியாவதை தவிர்க்க வேண்டும். கொசுக்கள் உற்பத்தி கண்டறியப்படும் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள், கொசுக்கள் பெருக்கத்தை முற்றிலும் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...