காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி விழா கோலாகலமாக நடைபெற்றது

கோவை காரமடை அரங்கநாதர் கோவிலில் ஜூலை 17ஆம் தேதி ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம், வலம் வருதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.


Coimbatore: கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோவிலில் ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி விழா ஜூலை 17ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அரங்கநாதர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

விழாவின் ஒரு பகுதியாக கால சந்தி பூஜை, விஸ்வக் சேனர் ஆராதனை, புண்யாவதனம், கலச ஆவாஹனம் போன்ற வைபவங்கள் நடைபெற்றன. ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடர்ந்து தேன், நெய், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகிய வாசனை திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

பின்னர், அரங்கநாதபெருமாள் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி, மேள தாளங்கள் முழங்க கோவில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பிறகு, ஆஸ்தானம் எழுந்தருளிய அரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உச்சி கால பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வேத பாராயணம், சாற்று முறை மற்றும் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராஸ்தார்கள், கோவில் செயல் அலுவலர், அறங்காவலர் குழுவினர், பணியாளர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆடி மாத ஏகாதசி விழா காரமடை அரங்கநாதர் கோவிலில் பக்தி பரவசத்துடன் நிறைவடைந்தது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...