கோவையில் வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட கேரளாவைச் சேர்ந்த 11 பேர் கைது

கோவை புதூர் குளத்துப்பாளையம் பகுதியில் வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட கேரளா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 11 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்ட இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Coimbatore: கோவை புதூர் குளத்துப்பாளையம் பகுதியில் வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 11 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கோவை அருகே உள்ள கோவை புதூர் குளத்துப்பாளையம் பகுதியில் குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் ஜூலை 17 அன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த ஒரு குழுவினரை அவர்கள் கவனித்தனர்.

சந்தேகத்தின் பேரில் அந்தக் குழுவினரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கோவை புதூரில் உள்ள வீடுகளில் கொள்ளை நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 11 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களின் விவரம்:

1. முகமத் யாதின் (வயது 40) - கேரளா, காசர்கோடு

2. சுனில் (வயது 45) - கேரளா, காசர்கோடு

3. அப்துல் கரீம் (வயது 47) - கேரளா, கண்ணூர்

4. சலீம் மாலிக் (வயது 25) - திருப்பூர் மங்கலம்

5. ஷாஜகான் (வயது 26) - திருப்பூர் மங்கலம்

6. சாமல் (வயது 46) - கேரளா, கண்ணூர்

7. நவ்பீல் காசிம் ஷேக் (வயது 29) - கர்நாடகா

8. முகமது யாசீர் (வயது 18) - திருப்பூர் காங்கேயம்

மேலும் மூன்று பேரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்தக் குழுவில் இருந்த சரவணன் என்பவர் தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.

கைது செய்யப்பட்ட 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...