பில்லூர் அணை நீர்மட்டம் உயர்வு: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு 5வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை

பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியதால், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து 5வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.


கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக அணையின் நீர் மட்டம் உயர துவங்கி கடந்த நான்கு நாட்களுக்கு முன் அணையின் மொத்த நீர்தேக்க உயரமான 100 அடியில் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியது. தற்போது அணைக்கு வினாடிக்கு 10,120 கன அடி வரை நீர்வரத்து உள்ளதால் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

இந்த நிலையில், பவானியாற்றங்கரையோர பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஐந்தாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை இன்று ஜூலை 20 அன்று விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும், தேவைப்பட்டால் மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலங்களில் உடனடியாக உதவி பெற 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...