உடுமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள், நாய் தொல்லை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரினர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:

1. பாரம்பரிய யானை வழித்தடங்களை விடுத்து புதிய வழித்தடங்களை ஏற்படுத்த வேண்டாம்.

2. சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும்.

3. காட்டு பன்றி, குரங்கு, மான், மயில்களால் விவசாய பயிர்கள் நாசமாவதை தடுக்க வேண்டும்.

4. கேரள அரசைப் போன்று பன்றிகளை கட்டுப்படுத்த வாய் வெடி மருந்தை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும்.



5. வனவிலங்குகளால் உயிரிழக்கும் விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு மற்றும் சேதமாகும் பயிர்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும்.

6. கிராமப்புறங்களில் நாய்களால் உயிரிழக்கும் ஆடு, கன்றுகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்.

7. நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ் ஆர் மதுசூதனன், மாவட்ட பொருளாளர் பாலதண்டபாணி, மாவட்ட துணைத்தலைவர் எஸ் பரமசிவம், மடத்துக்குளம் தாலூகா செயலாளர் வீரப்பன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...