தாராபுரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தர்ணா போராட்டம் - 2.75 கோடி ரூபாய் நிதி வழங்க கோரிக்கை

தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் தர்ணா போராட்டம். மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாத 2.75 கோடி ரூபாய் நிதியை கோரி போராட்டம்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ், ஊராட்சி நிர்வாகத்திற்கு வழங்க வேண்டிய 2.75 கோடி ரூபாய் நிதியை வழங்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கடந்த சில மாதங்களாக கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, கடந்த வாரம் பொதுமக்கள் ஆர்.டி.ஓ செந்தில் அரசனிடம் மனு அளித்தனர். அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் எச்சரித்தனர்.

இந்நிலையில், கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த மூன்று வருடங்களாக கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்திற்கு வரவேண்டிய 2.75 கோடி ரூபாய் நிதி வழங்கப்படவில்லை என்றும், இதனால் எந்த வளர்ச்சி பணிகளும் செய்ய இயலவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.



இது குறித்து கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில், "மக்களுக்கான பணிகளை செய்ய வளர்ச்சி கட்டணங்கள் வழங்கப்படாததால், அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் எனக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு எனது பஞ்சாயத்திற்கு வளர்ச்சி பணிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

மாவட்ட ஆட்சியர் பஞ்சாயத்திற்கு வழங்க வேண்டிய வளர்ச்சி நிதியை வழங்கும் வரை தர்ணா போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...