உடுமலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

உடுமலையில் முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் மின் கட்டண உயர்வு மற்றும் நியாயவிலை கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு குறித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையம் முன்பு திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கப்படாததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார். தாலிக்கு தங்கம், இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல நல்ல திட்டங்கள் தமிழகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் சாஸ்திரி சீனிவாசன், நகரச் செயலாளர் ஹக்கீம், ஒன்றிய செயலாளர்கள் அன்பர் ராஜன், பிரனேஷ், முருகேசன், சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை மற்றும் பல்லடம் பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...