கோவையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2024-25 நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
Coimbatore: 2024-25 நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அதில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக கூறி கோவையில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகத்துக்கு முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அனைத்துக் கட்சியினரும் காதில் பூ சுற்றியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரிடர் நிவாரண நிதி, கோவை-மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள், மற்றும் ரயில்வே துறை சார்ந்த தமிழ்நாட்டுக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படாததை சுட்டிக்காட்டி, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின் போது, "கோவிந்தா கோவிந்தா" என்ற பாடலும் பாடப்பட்டது. தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டுக்காக முதல்வர் கேட்ட எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. ஆந்திராவிற்கும் பீகாருக்கும் நிதி ஒதுக்கிய மோடி அரசு, தமிழகத்திற்கு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை," என்று குற்றம்சாட்டினார்.

மேலும் அவர், "இந்தியாவிலேயே அதிக வரி செலுத்தும் மாநிலங்களில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இருப்பினும் மோடி அரசு மாற்றான் தாய் மனநிலையோடு செயல்பட்டிருக்கிறது. வருங்காலத்தில் மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்கு வருகை தரும் போது, அனைத்து கட்சிகளாலும் திட்டமிட்டு கருப்புக் கொடி காட்டப்படும்," என்று எச்சரிக்கை விடுத்தார்.
கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகத்துக்கு முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அனைத்துக் கட்சியினரும் காதில் பூ சுற்றியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரிடர் நிவாரண நிதி, கோவை-மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள், மற்றும் ரயில்வே துறை சார்ந்த தமிழ்நாட்டுக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படாததை சுட்டிக்காட்டி, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின் போது, "கோவிந்தா கோவிந்தா" என்ற பாடலும் பாடப்பட்டது. தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டுக்காக முதல்வர் கேட்ட எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. ஆந்திராவிற்கும் பீகாருக்கும் நிதி ஒதுக்கிய மோடி அரசு, தமிழகத்திற்கு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை," என்று குற்றம்சாட்டினார்.
மேலும் அவர், "இந்தியாவிலேயே அதிக வரி செலுத்தும் மாநிலங்களில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இருப்பினும் மோடி அரசு மாற்றான் தாய் மனநிலையோடு செயல்பட்டிருக்கிறது. வருங்காலத்தில் மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்கு வருகை தரும் போது, அனைத்து கட்சிகளாலும் திட்டமிட்டு கருப்புக் கொடி காட்டப்படும்," என்று எச்சரிக்கை விடுத்தார்.