நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு: கோவையில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2024-25 நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.


Coimbatore: 2024-25 நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அதில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக கூறி கோவையில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகத்துக்கு முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அனைத்துக் கட்சியினரும் காதில் பூ சுற்றியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரிடர் நிவாரண நிதி, கோவை-மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள், மற்றும் ரயில்வே துறை சார்ந்த தமிழ்நாட்டுக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படாததை சுட்டிக்காட்டி, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.



ஆர்ப்பாட்டத்தின் போது, "கோவிந்தா கோவிந்தா" என்ற பாடலும் பாடப்பட்டது. தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டுக்காக முதல்வர் கேட்ட எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. ஆந்திராவிற்கும் பீகாருக்கும் நிதி ஒதுக்கிய மோடி அரசு, தமிழகத்திற்கு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை," என்று குற்றம்சாட்டினார்.



மேலும் அவர், "இந்தியாவிலேயே அதிக வரி செலுத்தும் மாநிலங்களில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இருப்பினும் மோடி அரசு மாற்றான் தாய் மனநிலையோடு செயல்பட்டிருக்கிறது. வருங்காலத்தில் மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்கு வருகை தரும் போது, அனைத்து கட்சிகளாலும் திட்டமிட்டு கருப்புக் கொடி காட்டப்படும்," என்று எச்சரிக்கை விடுத்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...