பொள்ளாச்சியில் பாலாற்றின் குறுக்கே நடைபெறும் மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

பொள்ளாச்சியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்படும் மேம்பாலப் பணிகள் இரண்டு ஆண்டுகளாக முடிவடையாமல் இருப்பதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சோமந்துறை சித்தூரில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக முடிவடையாமல் இருப்பதால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த மேம்பாலப் பணிகள் ஏழு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டன. ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டிருந்தாலும், இன்னும் பணிகள் முடிவடையவில்லை. தற்போது ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சாலை சோமந்துறை சித்தூரில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்கான முக்கிய பாதையாகும். முன்னதாக இருந்த தற்காலிகப் பாலம் கடந்த ஆண்டு ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அது இன்னும் சரி செய்யப்படவில்லை. மேலும், ஆற்றின் குறுக்கே கட்டுமானப் பணிகளுக்காக கம்பிகள் மற்றும் கற்கள் கொட்டப்பட்டுள்ளன.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் தென் சங்கம்பாளையம் மற்றும் சுங்கம் வழியாக சுமார் எட்டு கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கரடுமுரடான பாதைகளில் உயிர் பயத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது. சிலர் விபத்துக்கும் உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், பாலாற்றின் குறுக்கே நடைபெறும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஜூலை 24 ஆம் தேதி கோரிக்கை விடுத்துள்ளனர். பணிகள் விரைவில் முடிக்கப்பட்டால் அப்பகுதி மக்களின் போக்குவரத்து சிரமங்கள் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...