கோடநாடு வழக்கு: கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் தீபு மற்றும் உதயகுமார் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த தீபு மற்றும் உதயகுமார் கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள். ஏ.டி.எஸ்.பி. முருகவேல் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.


Coimbatore: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த தீபு மற்றும் உதயகுமார் ஆகியோர் இன்று கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள்.

கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. முருகவேல் தலைமையிலான காவல் துறையினர் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.



2017ஆம் ஆண்டு நிகழ்ந்த கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த வழக்கில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தீபு மற்றும் 7வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள உதயகுமார் ஆகியோருக்கு ஜூலை 25 அன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி இன்று இருவரும் விசாரணைக்காக ஆஜரானார்கள்.

மேலும், ஜம்ஷீர் அலி மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோர் ஜூலை 30 அன்று கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மொத்தம் 12 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...