கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம்: ஊடகவியலாளர்களுக்கு ஆணையாளர் வழிகாட்டுதல்

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் ஜூலை 26 அன்று நடைபெற உள்ளது. ஊடகவியலாளர்கள் கூட்டத்தின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை ஆணையாளர் வெளியிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 26, 2024 அன்று காலை 10 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கத்தில் மாமன்ற சாதாரண கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஊடகவியலாளர்களுக்கு சில வழிகாட்டுதல்களை ஆணையாளர் வழங்கியுள்ளார். அதன்படி, மாமன்றம் தொடங்கிய முதல் பத்து நிமிடங்கள் மட்டுமே புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதி வழங்கப்படும். அதன் பிறகு, ஊடகவியலாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பின்வரிசை இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து செய்திகளை சேகரிக்க வேண்டும்.

மாமன்ற நடவடிக்கையின் போது, ஊடகவியலாளர்கள் தங்களது இருக்கைகளை விட்டு முன்னே வருவதோ, மாமன்ற உறுப்பினர்கள் பேசுவதை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதோ கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் என்று ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

"அனைத்து ஊடகவியலாளர்களும் ஒத்துழைப்பு நல்கி, இம்மாமன்றத்தின் மாண்பை காத்திட உதவ வேண்டும்," என்று ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...