கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். முன்னாள் மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமாவைத் தொடர்ந்து இந்த தேர்தல் நடத்தப்படுகிறது.
Coimbatore: கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடி ஜூலை 25-ம் தேதி அறிவித்துள்ளார்.
முன்னதாக, கோவை மாநகராட்சியின் மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். கல்பனா ஆனந்தகுமார் மேயராக பொறுப்பேற்றவுடன் திமுக கட்சி நிர்வாகிகளை மதிக்காமல் செயல்பட்டதாகவும், மாநகராட்சி மண்டல தலைவர்களுடன் மோதல் போக்குடன் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மேலும், நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் முறையாக வேலை பார்க்காமல் இருந்தது உள்ளிட்ட தொடர் புகார்கள் எழுந்தன. கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் சந்தை வசூல் செய்தது, ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கேட்டது போன்ற சர்ச்சைகளும் எழுந்தன.
இந்நிலையில், கட்சி தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் உடல்நிலை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக ராஜினாமா செய்வதாக கூறி, கல்பனா ஆனந்தகுமார் மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரனிடம் ராஜினாமா கடிதம் அளித்தார்.
இதையடுத்து, கோவை மாநகராட்சி சாதாரண கூட்டத்தில் துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமா விவாதமின்றி தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
மாநில தேர்தல் ஆணையம் வழங்கிய அனுமதியின் பேரில், காலியாக உள்ள கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் திமுக தலைமை ஒரு வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நாளில் மாமன்ற உறுப்பினர்கள் மேயரை தேர்வு செய்வார்கள். திமுக பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால், திமுக வேட்பாளர் போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கோவை மாநகராட்சியின் மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். கல்பனா ஆனந்தகுமார் மேயராக பொறுப்பேற்றவுடன் திமுக கட்சி நிர்வாகிகளை மதிக்காமல் செயல்பட்டதாகவும், மாநகராட்சி மண்டல தலைவர்களுடன் மோதல் போக்குடன் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மேலும், நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் முறையாக வேலை பார்க்காமல் இருந்தது உள்ளிட்ட தொடர் புகார்கள் எழுந்தன. கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் சந்தை வசூல் செய்தது, ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கேட்டது போன்ற சர்ச்சைகளும் எழுந்தன.
இந்நிலையில், கட்சி தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் உடல்நிலை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக ராஜினாமா செய்வதாக கூறி, கல்பனா ஆனந்தகுமார் மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரனிடம் ராஜினாமா கடிதம் அளித்தார்.
இதையடுத்து, கோவை மாநகராட்சி சாதாரண கூட்டத்தில் துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமா விவாதமின்றி தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
மாநில தேர்தல் ஆணையம் வழங்கிய அனுமதியின் பேரில், காலியாக உள்ள கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் திமுக தலைமை ஒரு வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நாளில் மாமன்ற உறுப்பினர்கள் மேயரை தேர்வு செய்வார்கள். திமுக பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால், திமுக வேட்பாளர் போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.