கோவை செல்வபுரத்தில் ரோந்து பணியின் போது சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது, 49 வயது பெண் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
செல்வபுரம் போலீசார் நேற்று (ஜூலை 25) வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்லாபுரம் தெற்கு ஹவுசிங் யூனிட் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த ஒரு பெண்ணை போலீசார் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது, அந்தப் பெண் முரண்பட்ட பதில்களை அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், மேலும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் செல்வபுரம் தெற்கு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சாகுல் ஹமீத் என்பவரின் மனைவி பர்ஹத் நிஷா (49) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் பர்ஹத் நிஷாவின் மகன் அப்துல் கலாம் (25) மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது அவரை தேடி வருகின்றனர்.
செல்வபுரம் போலீசார் நேற்று (ஜூலை 25) வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்லாபுரம் தெற்கு ஹவுசிங் யூனிட் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த ஒரு பெண்ணை போலீசார் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது, அந்தப் பெண் முரண்பட்ட பதில்களை அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், மேலும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் செல்வபுரம் தெற்கு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சாகுல் ஹமீத் என்பவரின் மனைவி பர்ஹத் நிஷா (49) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் பர்ஹத் நிஷாவின் மகன் அப்துல் கலாம் (25) மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது அவரை தேடி வருகின்றனர்.