காளப்பட்டியில் மூதாட்டியை தாக்கி நகை கொள்ளையடித்த காதல் ஜோடி கைது

கோவை காளப்பட்டியில் 80 வயது மூதாட்டியின் வீட்டில் புகுந்து தாக்கி 3 பவுன் நகையை கொள்ளையடித்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டனர். கொள்ளையடித்த நகை மீட்கப்பட்டது.


கோவை: கோவை காளப்பட்டியில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகையை கொள்ளையடித்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டனர்.

காளப்பட்டியில் உள்ள பழைய தபால் அலுவலக வீதியைச் சேர்ந்த நஞ்சம்மாள் (80) என்ற மூதாட்டி நேற்று முன்தினம் பகலில் தனியாக வீட்டில் இருந்தபோது, ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு வாலிபர் அவரை தாக்கி, அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.

காயமடைந்த நஞ்சம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து கோவில்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து இந்த கொள்ளையை நடத்தியது தெரிய வந்தது.

தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையின் பின்னர், காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். கைதான இருவரும் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த நதியா என்ற நர்மதா (23) மற்றும் அவரது காதலன் காளப்பட்டியைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஸ்வரன் (28) என அடையாளம் காணப்பட்டனர்.

விசாரணையில், நர்மதாவின் கணவர் அவரை விட்டுப் பிரிந்து சென்றதால், விக்கியுடன் காதல் ஏற்பட்டு அப்பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்தது. செலவுக்குப் பணம் இல்லாததால் இந்தக் கொள்ளையை நடத்தியுள்ளனர். கைதானவர்களிடமிருந்து 3 பவுன் தங்கச் சங்கிலி மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜூலை 26 அன்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...