உடுமலையில் அன்பு பாலம் அமைப்பின் 4வது ஆண்டு இலவச பொருட்கள் விநியோகம்

உடுமலையில் அபெக்ஸ் கிளப்பின் அன்பு பாலம் அமைப்பு 4வது ஆண்டாக ஏழை எளிய மக்களுக்கு இலவச பொருட்கள் விநியோகம் செய்தது. சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ராம அய்யர் திருமண மண்டபத்தில் அபெக்ஸ் கிளப்பின் அன்பு பாலம் அமைப்பு சார்பில் 4வது ஆண்டாக இலவச பொருட்கள் விநியோகத் திட்டம் நேற்று காலை தொடங்கியது.

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நல்ல நிலையில் உள்ள ஆடைகள், புத்தகங்கள், பள்ளி பைகள், விளையாட்டு பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் மண்டபத்தில் குவிக்கப்பட்டன. சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மண்டபத்திற்கு வருகை தந்து தங்களுக்கு தேவையான உடைகள் மற்றும் மாணவர்களுக்கான புத்தகங்களை இலவசமாக பெற்றுச் சென்றனர்.



இந்த நிகழ்வில் அபெக்ஸ் தேசிய தலைவர் பிரசாத், மாவட்ட ஆளுநர் ஜெயபால் மற்றும் தேசிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். உடுமலை அபெக்ஸ் தங்கத் தலைவர் கோவிந்தராஜன், உப தலைவர் சந்திரன், செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் மவுன குருசாமி மற்றும் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ராம அய்யர் மண்டப அறக்கட்டளையின் சுப்புராமன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...