உடுமலையில் அன்பு பாலம் அமைப்பின் 4வது ஆண்டு இலவச பொருட்கள் விநியோகம்

உடுமலையில் அபெக்ஸ் கிளப்பின் அன்பு பாலம் அமைப்பு 4வது ஆண்டாக ஏழை எளிய மக்களுக்கு இலவச பொருட்கள் விநியோகம் செய்தது. சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ராம அய்யர் திருமண மண்டபத்தில் அபெக்ஸ் கிளப்பின் அன்பு பாலம் அமைப்பு சார்பில் 4வது ஆண்டாக இலவச பொருட்கள் விநியோகத் திட்டம் நேற்று காலை தொடங்கியது.

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நல்ல நிலையில் உள்ள ஆடைகள், புத்தகங்கள், பள்ளி பைகள், விளையாட்டு பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் மண்டபத்தில் குவிக்கப்பட்டன. சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மண்டபத்திற்கு வருகை தந்து தங்களுக்கு தேவையான உடைகள் மற்றும் மாணவர்களுக்கான புத்தகங்களை இலவசமாக பெற்றுச் சென்றனர்.



இந்த நிகழ்வில் அபெக்ஸ் தேசிய தலைவர் பிரசாத், மாவட்ட ஆளுநர் ஜெயபால் மற்றும் தேசிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். உடுமலை அபெக்ஸ் தங்கத் தலைவர் கோவிந்தராஜன், உப தலைவர் சந்திரன், செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் மவுன குருசாமி மற்றும் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ராம அய்யர் மண்டப அறக்கட்டளையின் சுப்புராமன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...