கோவையில் தூய்மை பணியாளரை கடத்தி தாக்கிய 5 பேர் கைது

கோவை ராமநாதபுரம் பகுதியில் மாநகராட்சி தூய்மை பணியாளரை ஆட்டோவில் கடத்தி தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.


Coimbatore: கோவை ராமநாதபுரம் காமராஜர் நகரை சேர்ந்த தரணீதரன் (23) என்ற மாநகராட்சி தூய்மை பணியாளர் நேற்று (ஜூலை 27) ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் நின்றிருந்தபோது, குடிபோதையில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரிடம் தகராறு செய்து, ஆட்டோவில் கடத்தி சென்றனர்.

செட்டிபாளையம் அருகே உள்ள ஒரு மறைவான இடத்தில் ஆட்டோவை நிறுத்தி, அந்த 5 பேரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் தரணீதரனை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை மீண்டும் ஆட்டோவில் ஏற்றி அவரது வீட்டருகே இறக்கி விட்டு சென்றனர். காயமடைந்த தரணீதரனை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து தாக்குதல் நடத்திய தெற்கு உக்கடத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (29), மலுமிச்சம்பட்டியை சேர்ந்த அன்வர் (20), மூக்கன் (21), செட்டிபாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சுமன் (21), புல்லுக்காட்டை சேர்ந்த ரஞ்சித் (23) ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...