கோவை கவுண்டம்பாளையத்தில் நீதிமன்ற ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் வசித்த 50 வயது நீதிமன்ற ஊழியர் சந்திரசேகர், வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காரணம் தெரியவில்லை.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சந்திரசேகர் (50) என்பவர் கோவை 5வது கூடுதல் நீதிமன்றத்தில் கிளார்க்காக பணிபுரிந்து வந்தார். நேற்று (ஜூலை 28) அவரது மனைவி பூங்கொடி, மகள் மற்றும் மகனுடன் சுப்பிரமணியம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

வீட்டில் தனியாக இருந்த சந்திரசேகர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரைப் பார்க்க வந்த உறவினர் ஒருவர் இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக சந்திரசேகரின் மனைவி மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சந்திரசேகரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்திரசேகரின் மனைவியும் குழந்தைகளும் அவரது உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

இச்சம்பவம் தொடர்பாக கவுண்டம்பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்திரசேகரின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...