கௌசிகா நதி புனரமைப்பு: ஜல் சக்தி அபியான் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கள ஆய்வு

கோவையில் ஜல் சக்தி அபியான் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கௌசிகா நதி புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தனர். வையம்பாளையம் தடுப்பணை மற்றும் அக்ரஹார சாமக்குளம் ஏரியை நேரில் பார்வையிட்டு, மக்கள் இயக்கத்தின் முயற்சிகளை பாராட்டினர்.


கோவை: கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் ஜூலை 30 ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், ஜல் சக்தி அபியான் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் குழுவிற்கு கௌசிகா நீர் கரங்களின் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.



கலந்தாய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து, அதிகாரிகள் குழு கௌசிகா நதியின் புனரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தது. குறிப்பாக, கௌசிகா நீர்கரங்களின் முன்னெடுப்புகளின் மூலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட வையம்பாளையம் கௌசிகா நதி தடுப்பணை மற்றும் அக்ரஹார சாமக்குளம் ஏரியை பார்வையிட்டனர்.

கள ஆய்வின் போது, பல்வேறு நீர்நிலைகளில் மக்கள் இயக்கமாக மேற்கொண்டு வரும் மீட்டெடுப்பு முயற்சிகளை அதிகாரிகள் கேட்டறிந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த நேரடி கள ஆய்வின் முடிவில், அதிகாரிகள் குழு முக்கியமான முடிவுகளை எடுத்தது.

கௌசிகா நதியையும், மாங்கரை நீர்ப்பிடிப்பு பகுதிகளையும் முழுமையாக புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் முன்வைப்பதாகவும், இதற்கான தேவையான ஒத்துழைப்புகளை பெற்றுத்தர உறுதி அளிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...