கோவையில் ஜோசியம் பார்ப்பதாகக் கூறி கடத்தல் மற்றும் மோசடி செய்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த பினீஷ்குமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவின் பேரில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த கடத்தல் குற்றவாளி பினீஷ்குமார் (45) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜூலை 31 அன்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பினீஷ்குமார், கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமாருக்கு (48) ஜோசியம் பார்ப்பதாகக் கூறி கடத்திச் சென்று மோசடி செய்த குற்றத்திற்காக நெகமம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் ஏற்கெனவே பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதும், தொடர்ந்து பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்குக்கும் பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார்.
இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, பினீஷ்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் பேரில் பினீஷ்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பினீஷ்குமார், கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமாருக்கு (48) ஜோசியம் பார்ப்பதாகக் கூறி கடத்திச் சென்று மோசடி செய்த குற்றத்திற்காக நெகமம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் ஏற்கெனவே பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதும், தொடர்ந்து பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்குக்கும் பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார்.
இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, பினீஷ்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் பேரில் பினீஷ்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.