பொள்ளாச்சி அருகே காளியப்பாகவுண்டன் புதூர் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது - போக்குவரத்து துண்டிப்பு

பொள்ளாச்சி அருகே காளியப்பாகவுண்டன்புதூரில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் மூழ்கியது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆழியாறு அணை நீர்மட்டம் உயர்வால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



கோவை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆழியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதால் அணைக்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள காளியப்பாகவுண்டன்புதூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட தரைமட்ட பாலம் ஆற்றில் மூழ்கியது.



இதனால் அப்பகுதியில் பொது போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.



இதற்கிடையே, செல்ஃபி மோகத்தால் பொதுமக்கள் பலர் ஆற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை உணராமல் புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்து வருகின்றனர். இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து அதிகாரிகள் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...