பீளமேடு பகுதி -1 சார்பாக அருந்ததியர் சமூகத்திற்கான 3 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை வரவேற்று இனிப்பு வழங்கும் நிகழ்வு

கோவை பீளமேடு பகுதி -1 சார்பாக, அருந்ததியர் சமூகத்திற்கான 3 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை வரவேற்று நேரு நகரில் இனிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை பீளமேடு பகுதியில், அருந்ததியர் சமூகத்திற்கான 3% உள் இடஒதுக்கீட்டை வரவேற்கும் விதமாக இனிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.



முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சி காலத்தில் 2009 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த அருந்ததியர் சமூகத்திற்கான 3% உள் இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் அங்கீகரித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக பீளமேடு பகுதி -1 சார்பாக, 26 வது வட்டத்தில் நேரு நகர் பகுதியில் இன்று மாலை 5 மணிக்கு இனிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.



இந்நிகழ்வில் பீளமேடு பகுதி -1 செயலாளர் துரை. செந்தமிழ் செல்வன் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். 26 வது வட்ட கழக செயலாளர் ஆ.மாடசாமி முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.



இந்நிகழ்வில் பகுதி துணை செயலாளர் லக்ஷ்மி, மாவட்ட பிரதிநிதி ஜெயராஜ், வெ. துரைசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் க. மணிகண்டன், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் கே. சி. ரமேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், வட்ட கழக நிர்வாகிகள் குருசாமி, அனுசியா, தாமஸ் துறை, தகடூர் செல்வம், வேலுசாமி, பூபதி, வெங்கடேஷ், கார்த்திக், ரஞ்சித், சுந்தரராஜ், அனந்தி, காஸ்டிங் நடராஜ் உள்ளிட்ட கழக தோழர்கள் மற்றும் முன்னோடிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...