கோவை சவுரிபாளையம் அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு

கோவையில் சவுரிபாளையம் அருகே கல்லூரி மாணவர் விஸ்வநாதன் மீது 5 பேர் தாக்குதல் நடத்தினர். முன்விரோதம் காரணமாக நடந்த இந்த சம்பவத்தில் மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.


Coimbatore: கோவை சவுரிபாளையம் ரோட்டில் உள்ள ஜிம் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் மீது 5 பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள சின்னக்குப்பம், கோபிநாதன் பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவரது மகன் விஸ்வநாதன் (20) கோவையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

விஸ்வநாதனின் தம்பி சபரியை அதே பகுதியை சேர்ந்த பழனி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து சபரி தனது அண்ணன் விஸ்வநாதனிடம் தெரிவித்தார். இதனையடுத்து விஸ்வநாதன், தனது தம்பியை தாக்கிய பழனியை கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே முன் விரோதம் உருவானது.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 1) சவுரிபாளையம் ரோட்டில் உள்ள ஜிம் அருகில் விஸ்வநாதன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பழனி உட்பட 5 பேர் விஸ்வநாதனை தகாத வார்த்தைகளால் பேசி உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், போலீசார் கல்லூரி மாணவரை தாக்கிய பழனி, கௌதம், அன்பு, சர்ஜித், துவாரகேஷ் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...